Thursday, January 29, 2015

மாகாபாவுடன் ரொமன்ஸ் செய்ய தயாராகும் ஐஸ்வர்யா

சின்னத்திரை தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். 

மேலும் ‘அட்டி’ என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அப்படத்திற்கு ‘தீபாவளி துப்பாக்கி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மாகாபா ஆனந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். 

ஐஸ்வர்யா நடிப்பில் கடைசியாக ‘திருடன் போலீஸ்’ படம் வெளியானது. ‘காக்கா முட்டை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. 

‘தீபாவளி துப்பாக்கி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையின் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கியுள்ளனர். இப்படம் குறித்த மேலும் தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.